முகப்பு
இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து...

Updated On : 6 மார்ச், 2026 at 10:08 AM
யுபிஎஸ்சி
பகிர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வு (2025) 2025 ஆகஸ்ட் மாதத்தில் எழுத்துத் தேர்வுகளும், 2026 பிப்ரவரியில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேரை சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய ஆட்சியர் பணி (IAS), இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய காவல்துறை (IPS), இந்திய வருவாய்ப் பணி (IRS) மற்றும் பல்வேறு மத்திய சேவைகளில் குழு ஏ மற்றும் குழு பி-இன் கீழ் அடங்கும்.

958 பேரை பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களைப் பொறுத்துதான், நியமனங்கள்.

முதன்மையான ஐஏஎஸ் சேவையில் மொத்தம் 180 காலியிடங்கள் உள்ளன. அவற்றில் பொதுப் பிரிவினருக்கு 74, ஓபிசி பிரிவினருக்கு 47, பட்டியலினப் பிரிவினருக்கு 28, பொருளாதாரத்தில் பின்தங்கியோரில் 18, எஸ்டி பிரிவினருக்கு 13 என்றும் உள்ளன.

ஐஎஃப்எஸ் சேவையில் மொத்தம் 55 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பொதுப் பிரிவினருக்கு 22, ஓபிசி-க்கு 15, எஸ்சி-க்கு 8, பொருளாதாரத்தில் பின்தங்கியோரில் 6, எஸ்டி பிரிவினருக்கு 4 என்று நிரப்பப்படும்.

தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியவர்களில் அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடமும், இரண்டாமிடத்தில் ராஜேஸ்வரி சுவே எம் மற்றும் மூன்றாவதாக அகான்ஷ் துல் ஆகியோரும் இடங்களைப் பிடித்தனர்.

summary

UPSC civil services examination results declared

முழு கட்டுரையைப் படிக்க →