நிவர் புயலானது புதுச்சேரிக்கு அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்துச் சென்றது.நிவர் தீவிரப் புயலாக வலுகுறைந்து, வடக்கு - வடமேற்காக தரைப் பகுதியில் நகர்ந்து வருகிறது.புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் நாராயணசாமி.புயல் காரணமாக சென்னைவாசிகள் தங்களது கார்களை மேம்பாலத்துக்குக் கீழே நிறுத்தியிருந்தனர்.நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுகுறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நிவர் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.தமிழகக் கடலோரப் பகுதிகளில் கனமழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பதிவாகியுள்ளது.நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி.