மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பெண்டி பஜார் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று மழையால் பலமிழந்து, திடீரென இடிந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.