கள்ளக்குறிச்சி கலவரம் - புகைப்படங்கள்
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் அருகே கணியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் முன்பு போராடும் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள்.
அமைதியான முறையில் நீதி கேட்டு போராட்டம் நடத்திய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.
மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட போராட்டம், கலவரமாக மாறியது.
பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பேருந்துகளுக்கு தீ வைத்தும், கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்கள் தூக்கி வீசி சேதப்படுத்தியும், தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பதற்றம்.
போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
பள்ளியின் உள்ளே இருந்த பொருள்கள் சூறையாடிய பிறகு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.
பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனத்தை தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.
போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து காவல் துறை வாகனத்தையும் தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.