தில்லியில் ஜி 20 உச்சி மாநாடு கோலாகல தொடக்கம் - புகைப்படங்கள்
DIN
பொருளாதாரம், மருத்தும் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சுழல், வணிகம் சார்ந்தது மற்றும் தொழில்நுட்பத்தின் உலக பார்வை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 நடைபெற்றது.கூட்டங்களில் உறுப்பு நாடுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இன்றும் (செப். 9) நாளையும் (செப். 10) தலைநகர் தில்லியில், ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.