காஷ்மீரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ரியாசி மாவட்டத்தில் 230 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனையை ரூ.300 கோடி செலவில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைப்பு கட்டியுள்ளது.
இந்த மருத்துவமனை திறப்பு விழாவில், மோடியுடன், காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement