முகப்பு
இந்தியா

மீட்கப்பட்ட டிவிட்டர் கணக்கு: வெறுப்பாளர்களை கலாய்த்த ராகுல்!

நேற்று விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அந்த கணக்கில் இருந்து அவர் தனது வெறுப்பாளர்களுக்கு  நக்கல் ட்வீட் செய்துள்ளார்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

புதுதில்லி: நேற்று விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அந்த கணக்கில் இருந்து அவர் தனது வெறுப்பாளர்களுக்கு  நக்கல் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு நேற்று மதியம் 'ஹேக்' செய்யப்பட்டதுa. அந்த கணக்கைப் பயன்படுத்தி ஆபாச ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கணக்கு இன்று காலை மீட்கப்பட்டது.

அதன் வழியாக ட்வீட் செய்த ராகுல் காந்தி, 'இங்கிருக்கின்ற அனைத்து வெறுப்பாளர்களே! உங்களை எல்லாம் நான் விரும்புகிறேன்.நீங்கள் அனைவரும் அழகானவர்கள். ஆனால் உங்கள் வெறுப்பு உங்கள் கண்களை மறைக்கிறது.' என்று தெரிவித்துளளார்.

இதே போல் இன்று காலை முடக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →