இந்தியா

அடிச்சது லக்கி ப்ரைஸ்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இப்போ ‘டபுள்’ ஆகப்போகுது!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

DIN

புதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் ரூ.50000-த்தை ஊதியமாக பெற்று வருகிறார்கள்..அது போக இவர்களுக்கு என்று தனியான சலுகைகளும் உண்டு. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உ யர்த்துவது குறித்து  முடிவெடுக்க, பா.ஜ.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத்   தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக குழுவை மத்திய அரசு நியமித்தது.

தற்போது இந்தக் குழுவின் பரிந்துரைகள் அரசுக்கு தரப்பட்டுள்ளன. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  தற்போதைய மாத ஊதியமான ரூ.50000-ஐ , ரூ.1 லட்சமாக உயர்த்த அந்த குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவர்களுகான சலுகைகளை அதிகப்படுத்தவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த பரிந்துரைகளை நிறைவற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT