முகப்பு
இந்தியா

கிலோ அரிசி ரூ.3-க்கு 2018 வரை வழங்கப்படும்: மத்திய அரசு

ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி ரூ.3-க்கும் அடுத்தாண்டு வரை வழங்கப்படும்; அந்த விலையை திருத்தியமைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி ரூ.3-க்கும் அடுத்தாண்டு வரை வழங்கப்படும்; அந்த விலையை திருத்தியமைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
மக்களவையில் கேள்விநேரத்தின்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலை திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.
எனினும், தற்போதுள்ள விலையின்படியே உணவு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 81 கோடி மக்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ், அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை கிலோ ரூ.2-க்கும், உமி நீக்கப்படாத பருப்பு உள்ளிட்ட வேறு சில தானியங்கள் கிலோ ரூ.1-க்கும் அடுத்தாண்டு வரை வினியோகிக்கப்படும் என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.

முழு கட்டுரையைப் படிக்க →