முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் வெங்கய்ய நாயுடு

நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்றார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்றார். அவர் பட்டு வேட்டி, சட்டை அங்கவஸ்திரம் அணிந்தபடி பதவியேற்றுக்கொண்டார். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

முன்னதாக வெங்கய்ய நாயுடு தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →