FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு! 

முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2017, 4:36 pm IST
பகிர்:

புதுதில்லி: முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை  விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் நிறைய வழக்குகளை தொடர்ந்துள்ளன. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்களுக்குதான் தார்மீக உரிமை உண்டு எனவும், எனவே அதற்காக அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை வழியாக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த மனுவுக்குத்தான் கேரளா உச்சநீதி மன்றத்தில் இடைமனு ஓன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வுக்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது   

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு  தார்மீக உரிமை கிடையாது. அணைப்பகுதியில் இணைப்பு சாலையான வல்லக்கடவு- முல்லைப்பெரியாறு சாலை சாதராணமான

பயன்பாட்டுக்காகவும், சிறிய இலகு ரக வாகனங்களை ஓட்டி செல்வது போலவும்தான் அமைக்கப்பட்டுள்ளது.  எனவே அதன்   வழியாக கனரக பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது.

எனவே முல்லை பெரியாறு பகுதியில் தமிழகம் எந்தவிதமான பாதுகாப்பு  மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கேரளா தனது மனுவில் தெரிவித்துள்ளது        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments