ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் கக்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்கள் லக்ஷர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மஜித் மீர், ஷரிக் அகமது மற்றும் இர்ஷாத் அகமது என அடையாளம் காணப்பட்டது.
மேலும், வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.