உத்தரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: இருவர் சாவு, 31 பேர் படுகாயம்
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:41 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டூய் என்ற இடத்தில் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது.
மேம்பாலத்தில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த பேருந்தில் பயணம் செய்த 31 பேர் படுகாயமடைந்தனர்.