தில்லி தூர்தர்ஷன் பவனில் தீ விபத்து
தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தர்ஷன் பவனில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தர்ஷன் பவனில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி மண்டி ஹவுஸில் உள்ள தூர்தர்ஷன் பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மதியம் 12.50 மணிக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 10 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தரைத்தளத்தில் இருந்த ஏசி அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.