இந்தியா

எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தவரின் பிற மாநில அரசு வேலை இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு 

எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சாதி குறிப்பிடப்படாத பிற மாநிலங்களில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு கோருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

DIN

புது தில்லி: எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சாதி குறிப்பிடப்படாத பிற மாநிலங்களில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு கோருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக வழக்கு ஒன்று வியாழன் அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தானகவுடர் மற்றும் எஸ்.ஏ. நசீர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை அல்லது கல்வி நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த பின் அங்கேயும் அவர் தன்னை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என கூறிட முடியாது என தெரிவித்து உள்ளது.

எனவே இந்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது மாநிலம் தவிர்த்த பிற மாநிலங்களில் அதே சாதியாக குறிப்பிடப்படாத நிலையில், அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT