புது தில்லி: தில்லியில் உள்ள கோசாலை ஒன்றில் 36 பசுக்கள் மர்ம மரணம் அடைந்துள்ள விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள கோசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 36 பசுக்கள் திடீரென்று உயிரிழந்ததை அடுத்து, ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்து, நோய் காரணமாக பசுக்கள் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
நோய்த் தடுப்பு குறித்து போதுமான முன் எச்சரிக்கை எடுக்காததால்தான் பசுக்கள் உயிரிழந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.