முகப்பு
இந்தியா

போலி ஆதாரங்களுடன் இந்திய பாஸ்போர்ட்: ஹைதராபாத்தில் ரோஹிங்யாக்கள் இருவர் கைது

போலி ஆதாரங்களுடன் இந்திய பாஸ்போர்ட் பெற்ற ரோஹிங்யாக்கள் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 21 மே 2018, 6:12 pm IST
பகிர்:

ஹைதராபாத்தில் போலியான ஆதாரங்களை வழங்கி இந்திய பாஸ்போர்ட் பெற்ற ரோஹிங்யாக்கள் இருவர் உட்பட நான்கு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பலபூர் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் சையது நயீம், முகமது அகீல், முகமது ஃபயாஸ் மற்றும் முகமது ஃபைஸல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது ஃபயாஸ் மற்றும் முகமது ஃபைஸல் ஆகியோர் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் ஆவர். இவர்களுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த சையது நயீம் மற்றும் முகமது அகீல் ஆகியோர் போலியான ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்றுத் தந்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.