இந்தியா

தெலங்கானா: தேர்தல் பிரசார ஜுரத்தால் விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்

தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.

ENS


கம்மம்: தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று கோஷம் எழுப்ப கூலி தொழிலாளர்களை பல்வேறு அரசியல் கட்சியினரும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.

உணவு, பணம் என கூலித் தொழிலாளர்களுக்கு தேர்தல் காலம்தான் உண்மையிலேயே தீபாவளித் திருவிழாக்காலம்.

ஆனால், கூலித் தொழிலாளர்கள் எல்லாம் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று விடுவதால் விவசாய வேலைக்கும், கட்டடத் தொழிலுக்கும் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

இது பற்றி கூலித் தொழிலாளி கூறுகையில், பிரசாரத்துக்குச் சென்றால் ஒருவருக்கு ரூ.500 கொடுக்கிறார்கள். அதுவும் சும்மா உட்கார்ந்திருக்க. கூலி வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் வேலை செய்தாலும் ரூ.300 தான் கூலி கிடைக்கும் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT