முகப்பு
இந்தியா

தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

புது தில்லியில் இன்று 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.

Updated On : 26 செப்டம்பர், 2018 at 5:22 PM
file photo
பகிர்:


புது தில்லி: புது தில்லியில் இன்று 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.

காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அஷோக் விஹார் பகுதியில் இருந்த 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அதன் நிலை மிக மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களும், தில்லி தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.