மேலும் 5 ஆண்டுகள் தாருங்கள் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி: பிரதமர் மோடி
இந்த 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
நடப்பு ஆட்சியின் போது அனைத்து காங்கிரஸ் ஊழல்வாதிகளையும் சிறை வாசல் வரை வரவழைத்துவிட்டேன். எனவே மேலும் ஒரு 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் அவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி. நமது ராணுவத்தை பலவீனப்படுத்துவது போன்ற போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இங்கு யார் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் பிணையில் வெளிய வருகின்றனர்.
அந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மக்கள் பணத்தை திருடுவதற்காகவே மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தனி பிரதமரை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாஜக மட்டுமே அங்கு நாட்டின் பாதுகாப்புக்காக போராடி, பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
Advertisement
முதல் தலைமுறை வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை நாட்டுக்கு அர்ப்பணியுங்கள். நாட்டின் பாதுகாப்பும், முன்னேற்றமும் தான் பாஜக அரசின் ஒரே குறிக்கோள் என்றார்.