இந்தியா

சோஃபியானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.

ANI

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாப்பாக்குடி அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்: பெண் கைது

தென்மண்டல பல்கலை. கிரிக்கெட் சாம்பியன் சென்னை

2019 முதல் 7,400 நக்ஸல்கள் கைது: மக்களவையில் அரசு தகவல்

மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

பிப். 26 முதல் மாா்ச் 2 வரை ஏழுமலையான் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT