இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார்: ராகுல் காந்தி 

DIN

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

தில்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் ஆம் ஆத்மியோ ஹரியாணா மற்றும்  பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க விரும்புவதாலேயே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தில்லியில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு பேரழிவாக இருக்கும். அதை உறுதி செய்வதற்காக தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஆனால் கேஜரிவால் மீண்டும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT