இந்தியா

விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி மகன் கைது

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பாஜக எம்பி ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ரூபா கங்குலி. இவருடைய மகன் ஆகாஷ் முகர்ஜி(20). நேற்றிரவு இவர் கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இவருடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோல்ப் கிளப்பின் சுவரில் மோதியது. 

இந்த சம்பவத்தில் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆகாஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் ஆகாஷ் முகர்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி கடந்த 2015ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

SCROLL FOR NEXT