இந்தியா

பழங்குடியினராக போலி சாதிச்சான்று: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மீது வழக்குப்பதிவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி (73) மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்று ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி (73) மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அம்மாநிலத்தைச் சேர்ந்த பிலாஸ்பூர் மாவட்ட காவல்நிலையத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர் பிரிவு ஒழுங்குமுறை அடிப்படையில் 10-ஆவது பிரிவின் கீழ் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தான் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்த போலி சாதிச்சான்று விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிணையில் வெளிவர முடியாத இந்த வழக்கின் அடிப்படையில் 2 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், தன் மீது சத்தீஸ்கர் போலீஸார் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அஜித் ஜோகி வெள்ளிக்கிழமை வழக்கு தொடர்ந்தார்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கன்வார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக தன்னை அடையாளப்படுத்தி வரும் அஜித் ஜோகி சாதி விவகாரம் தொடர்பாக கடந்த சில வருடங்களாக பிரச்னை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT