இந்தியா

மெட்ரோ ரயில் முன் குதித்து தந்தை தற்கொலை: வீட்டில் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

DIN

தந்தை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட  நிலையில், தனது மகளுடன் தாய் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தில்லி புறநகர்ப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டா செக்டர் 128-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் மற்றும் அவரது மகளுடன் வீட்டில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலின் முன் குதித்து அந்தப் பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி போலீஸ் அதிகாரி ஸ்வேதாப் பாண்டே கூறுகையில்,

ஆர்.எம்.எல் மருத்துவமனையில் தனது கணவரின் உடலை அடையாளம் காண அந்த பெண் சென்றார். பின்னர் வீடு திரும்பிய பின், தன் மகளுடன் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர்களது குடும்பம் கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT