முகப்பு
இந்தியா

அலிகார் பல்கலை. மாணவர்களிடையே மதவெறியை தூண்டியதாக கோரக்பூர் மருத்துவர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:35 PM
கோப்புப்படம்
பகிர்:

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது பேசப்பட்டவர் மருத்துவர் கஃபீல் கான். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மதவெறியை தூண்டும் வகையில் உரையாற்றியதற்காக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

டிசம்பர் 13ம் தேதி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 153ஏ-இன்(மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) கீழ் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிகார் எஸ்.பி. அபிஷேக் தெரிவித்தார். 

கஃபீல் கான் தனது பல்கலைக்கழக உரையில், 'இங்கு அனைவரும் இந்து மற்றும் முஸ்லீம்களாக இருக்கவே ஊக்குவிக்கப்படுகிறார்கள். மனிதத்தன்மையுடன் இருக்க யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் பதவிக்கு வந்ததில் இருந்தே அரசியலமைப்பு மீதான நம்பிக்கை போய்விட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களை இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. என்.ஆர்.சியை அமல்படுத்துவதன் மூலமாக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். 

தாடி வைத்திருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று ஆர்.எஸ்.எஸ் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியா முஸ்லீம்களுக்கான நாடு அல்ல என்பதை தற்போதைய அரசு பல்வேறு சட்டங்களின் மூலமாக நிரூபித்து வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்' என்று பேசியதாக எப்.ஐ.ஆர்-இல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

மேலும், அலிகார் பல்கலைக்கழகத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு வகையில், இந்துத்துவ எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →