முகப்பு
இந்தியா

மேற்கு வங்க மக்களை மம்தா அரசு நிராதரவாக விட்டுவிட்டது: மோடி 

மேற்கு வங்க மாநிலத்தில் அம்மா, மாதா என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி அரசு பற்றி மோடி கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:


மேற்கு வங்க மாநிலத்தில் அம்மா, மாதா என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி அரசு பற்றி மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சுரபந்தர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில மண்ணையே மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நாசப்படுத்திவிட்டது. மாநில மக்களை தவிக்கவிட்டுவிட்டது என்று கூறினார்.

மா, மாதி, மனுஷ் என்றெல்லாம் கூறி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள், தற்போது வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டு, மக்களை நிராதரவாக விட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.