புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு சம்ஜௌதா ரயில் பயணிகளின் வருகைக் குறைவு
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சம்பவத்துக்குப் பிறகு சம்ஜௌதா ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக
புது தில்லி: பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சம்பவத்துக்குப் பிறகு சம்ஜௌதா ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
புல்வாமா தாக்குதலின் எதிரொலி இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜௌதா ரயிலில் வெளிப்பட்டது.
தில்லி - லாகூர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலில் வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தியா வருவார்கள். ஆனால், திங்கட்கிழமை வந்த சம்ஜௌதா ரயிலில் வெறும் 100 பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். தில்லி ரயில் நிலையத்தில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும், இதேப்போல லாகூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் ரயில் தில்லி வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.