என்னாது, ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயர்ந்துவிட்டதா?
பட்ஜெட் அறிவிப்பினால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஜெய்ப்பூர்: பட்ஜெட் அறிவிப்பினால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையானது, அதன் உச்சபட்ச மதிப்பிலிருந்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் மீதான சாலைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான கூடுதல் வரியையும் (செஸ்) லிட்டருக்கு ரூ.2 உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் விகிதத்தை 26 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 18ல் இருந்து 22 சதவீதமாகவும் உயர்த்தியது.
இதனால் ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.4.62 அளவுக்கு உயர்ந்ததால், பெட்ரோல் லிட்டர் விலை ரூ.71.15 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.75.77க்கு விற்பனையானது.
இதேப்போல டீசல் விலையும் ரூ.4.59 உயர்ந்து நேற்று ரூ.66.65க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், இன்று ரூ.71.24 ஆக உள்ளது.