முகப்பு
இந்தியா

இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளித்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏர் இந்தியா 

மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

Updated On : 9 ஜூலை 2019, 8:01 pm IST
பகிர்:

புது தில்லி: மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இஸ்லாமியர்களுக்கான ஐந்து கடமைகளுள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதும் ஒன்று. இந்த பயணத்தின் போது மக்காவில் இருந்து 'ஜம் ஜம்' புனித நீரை பாட்டில்களில் எடுத்து வருவது அவர்களின் வழக்கமாகும். ஆனால் அந்த நீரை தங்களது நிறுவன விமானங்களில் எடுத்து வர தடை செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது இந்திய ஹஜ் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இந்நிலையில் மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பில் முன்னர் வெளியிட்ட அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments