முகப்பு
இந்தியா

மக்களவைக்கு மதியத்துக்கு மேல் வந்த ராகுல் முதல் முறையாக செய்த ஒரு காரியம்!

கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மக்களவையில் கோஷம் எழுப்பினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:29 AM
பகிர்:


புது தில்லி: கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் சர்ச்சைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மக்களவையில் கோஷம் எழுப்பினார்.

17வது மக்களவையில் முதல் முறையாக ராகுல் காந்தி இவ்வாறு ஒரு பிரச்னை குறித்து கோஷம் எழுப்பியுள்ளது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியத்துக்கு மேல் மக்களவைக்கு வந்தார் ராகுல். அப்போது கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கோஷம் எழுப்பினார்.

அவருடன் ஜனநாயகத்தைக் காப்பது உங்கள் கடமை என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இதற்கு அவைத்தலைவர் பதில் அளித்தும், அதனால் திருப்தி அடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் கோஷத்தில் ஈடுபட்டார். ஆனால் என்ன அவரது கோஷம், மற்ற உறுப்பினர்களின் கோஷத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பிறகு, கோஷத்தின் கடைசி வார்த்தையை மட்டும் சேர்ந்து சொல்லத் தொடங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.