மக்களவை சபாநாயகராகிறார் பாஜக எம்பி ஓம் பிர்லா!
மக்களவையின் புதிய சபாநாயகர் பதவியில் இரண்டு முறை பாஜக எம்.பி.யாக இருந்த ஓம் பிர்லாவை நியமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையின் புதிய சபாநாயகர் பதவியில் இரண்டு முறை பாஜக எம்.பி.யாக இருந்த ஓம் பிர்லாவை நியமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை தகவல்கள் அனைத்தும் உண்மையாகி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்பி ஓம் பிர்லாவின் பெயரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைக்குமானால், எவ்வித தடையும் இன்றி அவர் பெரும்பான்மை பலத்தோடு மக்களவையின் சபாநாயகர் பதவியில் அமர்வார்.
மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் எனும் நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் வேட்பாளர் யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா (57) மூன்று முறை எம்எல்ஏவாகவும் இரண்டுமுறை எம்.பியாகவும் தேர்வானவர்.
பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு மூத்த உறுப்பினர்களே தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், முதல் முறை மற்றும் இரண்டாம் முறை மக்களவை உறுப்பினர்களானவர்களும் கூட இப்பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
மனோகர் ஜோஷி 2002ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட போது, அவர் அப்போது முதல் முறையாக எம்பியாக தேர்வானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.