முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் தற்போது எத்தனை பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன? இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் 9 ஜெய்ஷ்-இ-முகமது உட்பட 22 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:


வாஷிங்டன்: பாகிஸ்தானில் 9 ஜெய்ஷ்-இ-முகமது உட்பட 22 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாலாகோட் அதிரடி தாக்குதலைப் போல பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி, எல்லைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளின் நடவடிக்கையை தடுப்போம் என்றும் இந்தியா கூறியுள்ளது.

பிப்ரவரி 26ம் தேதி பாலாகோட் மீது 2 நிமிடங்கள் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் பயங்கரவாத முகாமை அழித்து 350 பயங்கரவாதிகள் மற்றும் பயிற்சி பெற்று வந்தவர்கள் கொல்லலப்பட்டனர்.

உலக நாடுகள் முழுவதுக்கும் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து கொடுக்கும் மையப் புள்ளியாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் தனது அடையாளத்தைக் கூற விரும்பாத இந்திய அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.