முகப்பு
இந்தியா

அயோத்தி பிரச்னையை மத்தியஸ்தம் மூலம் தீர்க்க முடியாது: சிவசேனை

ராம ஜென்ம பூமி என்பது உணர்வுப் பூர்வமான விஷயம், இதனை மத்தியஸ்தம் செய்து தீர்க்க முடியாது என்று சிவ சேனை கருத்துத் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:20 AM
பகிர்:


மும்பை: ராம ஜென்ம பூமி என்பது உணர்வுப் பூர்வமான விஷயம், இதனை மத்தியஸ்தம் செய்து தீர்க்க முடியாது என்று சிவ சேனை கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் கூட தீர்க்க முடியாத இந்த பிரச்னையில், வெறும் 3 மத்தியஸ்தர்கள் எப்படி தீர்த்துவிடுவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போராடி வருபவர்கள் மத்தியஸ்தத்தை விரும்பாத போது அதனை ஏன் உச்ச நீதிமன்றம் தேர்வு செய்துள்ளது. இதனைத் தீர்க்க அரசாணை மட்டுமே உதவும் என்றும் கட்சி சார்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.