இந்தியா

துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி: லாலு மனைவி விமர்சனம் 

IANS

பாட்னா: துரியோதனன் அல்ல; மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஹரியாணாவின் ஹிசார் நகரில் செவ்வாயன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி தனது பேச்சில், 'பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையையும் கிடைக்கவிவ்ல்லை என்பதால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு என்பதே  கிடையாது.

வரலாறு நமக்கு வழங்கும்  ஆதாரமும் இதுதான், மகாபாரதத்தை நாம் ஆதாரமாக கொள்ளலாம். துரியோதனனிடமும் இருந்த அகங்காரம்தான் தற்போது பிரதமர் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் துரியோதனிடம் சமரசம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு அடிகோலியது.' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் துரியோதனன் அல்ல;  மோடி ஒரு காட்டுமிராண்டி என்று பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

புதன் கிழமையன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராப்ரி தேவி  கலந்து கொண்டு பேசினார். அப்போதுஅவர் பேசியதாவது:

மோடியை துரியோதனன் என்று அழித்து பிரியங்கா தவறு செய்து விட்டார். அவர் மோடியை கொலைகாரர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். அவர்தான் நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை கொல்லவும், கடத்தவும் காரணமாக அமைந்துள்ளார்.  இத்தகைய ஒரு மனிதன் காட்டுமிராண்டி மனநிலை கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT