இந்தியா

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா சந்திப்பு

DIN

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நாட்டில் உள்ள ஆளுநர்களில் இளவயது ஆளுநர் என்ற பெருமையை தெலங்கானா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை செளந்தரராஜன் (58) பெற்றுள்ளார். 

வயதில் மூத்த ஆளுநர் என்ற பெருமையை ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷண் ஹரிசந்தன் (85) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த மூத்த ஆளுநராக மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (84) உள்ளார். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT