இந்தியா

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு

DIN

மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம், கட்லபுரா கட் பகுதியில் விநாயகர் சிலை கரைக்கும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலை 4.30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

image courtesy ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT