குஜராத்தில் மேலும் 2 பேர் பலி: கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 308 ஆக உயர்வு
குஜராத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் பலியான இருவரில் அகமதாபாத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரும், காந்தி நகரத்தைச் சேர்ந்த 81 வயதுடையவரும் ஆவர்.
இதுகுறித்து சுகாதார முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில்,
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காந்தி நகரத்தைச் சேர்ந்த முதியவர் கரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 மணி நேரத்தில் குஜராத்தில் 46 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 308 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 17 பேர் வதோதராவிலும், அகமதாபாத் (11), ராஜ்கோட் (5), பருச் (4), பாவ்நகர் (4), படான் மற்றும் குச்-யில் தலா இரண்டு, காந்திநகரில் ஒன்றும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் அவருடைய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.