முகப்பு
தமிழ்நாடு

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ராமதாஸ்!

ராமதாஸ் தரப்பு பாமகவில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 30 மார்ச் 2026, 9:32 pm IST
முதல் கட்ட வேட்பாளர்களை அறிவிக்கும் ராமதாஸ் - எக்ஸ்
பகிர்:

ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராமதாஸ் கூட்டணியில் உள்ள சசிகலா நேற்று 21 வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், இன்று ராமதாஸ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

முதல் கட்ட வேட்பாளர்கள்

Advertisement

Advertisement

  • சேலம் மேற்கு - அருள், மாநில இணைப் பொதுச் செயலாளர்

  • வந்தவாசி - முரளி சங்கர், பொதுச் செயலாளர்

  • கும்பகோணம் - ம.க. ஸ்டாலின், மாநில நிர்வாககுழு உறுப்பினர்

  • விருத்தாசலம் - சுரேஷ், மாவட்டச் செயலாளர்

  • மயிலாடுதுறை - சக்திவேல், மாவட்டச் செயலாளர்

ஆகியோர் ராமதாஸ் தரப்பு பாமகவில் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

சசிகலாவின் கட்சியில் இருந்து முதல் கட்டமாக நேற்று 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலாவுடன் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தரப்பு பாமகவில் இருந்து முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் முழு விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

summary

Tn Election 2026 Ramadoss PMK Releases First Phase Candidate List

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments