மகாராஷ்டிரத்தில் துணை ஆய்வாளர் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் தன்னைத்தானே
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரிலிருந்து 170 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சாவர்கான் புறக்காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாநில ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 55 வயது துணை ஆய்வாளர், சந்திரகாந்த் ஷிண்டே தனது அறையில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இவர் புணே மாவட்டத்தில் வனவாடியைச் சேர்ந்தவர் இவர், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இந்த விபரீத முடிவில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.