நாசிக்கில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 276
மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 71 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நாசிக்: மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 71 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 276 ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவை மாலேகான் நகரத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆறு காவலர்கள் மற்றும் மூன்று மாத குழந்தை, 5 வயது மற்றும் 11 வயது குழந்தைக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 276 பேரில் 253 பேர் மாலேகான் மாவட்டத்திலிருந்தும், 10 பேர் நாசிக் நகரத்திலிருந்தும், 11 மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இதுவரை 11 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.