முகப்பு
இந்தியா

என்சிபி எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜகவில் இணையவில்லை: நவாப் மாலிக்

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை மாநில அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக் மறுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை நவாப் மாலிக் மறுத்துள்ளார். (கோப்புப்படம்)
பகிர்:


மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை மாநில அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக் மறுத்துள்ளார்.

இதுபற்றி நவாப் மாலிக் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"என்சிபி எம்எல்ஏ-க்கள் 12 பேர் பாஜகவில் இணையப்போவதாக சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். இது ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தி. தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்குச் சென்ற எம்எல்ஏ-க்கள்தான் மீண்டும் என்சிபி-க்குத் திரும்ப விரும்புகின்றனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்பட்டு, முறையாக அறிவிக்கப்படும்." என்று பதிவிட்டுள்ளார் நவாப் மாலிக்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து சிவசேனை 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கே பெரும்பான்மை இருந்தது. எனினும் முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, என்சிபி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →