முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ஜனநாயகத்தைக் காக்கவே சந்திரபாபு நாயுடு நடவடிக்கை: தெலுங்கு தேசம்

​ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருப்பதாக தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் ஜிவி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கோப்புப்படம்
பகிர்:


ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜிவி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்ததாவது:

"ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் தொலைபேசி உரையாடல்களை மாநில அரசு ஒட்டு கேட்கிறது. பேச்சுரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், மாநில அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறுகிறது. தொலைபேசி உரையாடல்கள் நீண்ட நாள்களாக ஒட்டு கேட்கப்படுகிறது." என்றார் அவர்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஒட்டு கேட்பதாக குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அந்தக் கடிதத்தில் இவ்விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →