ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்தனர்.
திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் க்ரீரி பகுதி தின்டிம் கிராமத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களும், ஒரு காவலரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூவரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தாக்குதல் நடத்திவிட்டு அங்கு பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு காவலர்கள் பலியாகினர்.
ஸ்ரீநகரின் புகா்ப் பகுதியான நெளகாம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மீது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டனா். இதில் மூன்று காவலா்கள் காயமடைந்தனா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவா்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா்களில் இருவா் உயிரிழந்தனா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.