தெலங்கானாவில் வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகள்கள் பலி
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் காந்தெட் மண்டல் பகுதியில் உள்ள பகிடையாலா கிராமத்தில், குடிசை வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள்கள் பலியாகினர்.
மகபூப்நகர்: தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் காந்தெட் மண்டல் பகுதியில் உள்ள பகிடையாலா கிராமத்தில், குடிசை வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள்கள் பலியாகினர்.
உயிரிழந்தவர்கள் 45 வயதாகும் ஷரனம்மா மற்றும் அவரது மகள்கள் வைஷாலி (14), பவானி (12) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக, பழைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பலியாகினர். ஷரனம்மாவின் கணவர் மல்லப்பா, வீட்டுக்கு வெளிய படுத்திருந்ததால் அவர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பினார்.