தகவல் தொழில்நுட்பத் துறையில் ராஜீவ் காந்தி பங்களிப்பு : வெங்கய்யா நாயுடு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் வியாழனன்று கொண்டாடப்டுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
இதுதொடர்பாக வியாழனன்று துணை குடியரசுத் தலைவர் செயலக சுட்டர் பக்கத்தில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தியின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.