முகப்பு
இந்தியா

கர்நாடக கனமழையில் நிரம்பிய காவிரி; நன்றி செலுத்திய எடியூரப்பா

கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பியதால், காவிரி ஆற்றுக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நன்றி செலுத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பியதால், காவிரி ஆற்றுக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நன்றி செலுத்தினார்.
பகிர்:

கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பியதால், காவிரி ஆற்றுக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நன்றி செலுத்தினார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய ஆறுகளிலும், கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

கர்நாடகத்தின் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளன.

காவிரி நதியால் அணைகள் நிரம்பியதால் முதல்வர் எடியூரப்பா காவிரி ஆற்றுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினார்.

மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சென்ற முதல்வர் எடியூரப்பா மலர் தூவி காவேரியை வணங்கினார். பிறகு அரிசி, பழங்கள், பூக்கள், புடவை உள்ளிட்டவற்றை வைத்து காவிரி ஆற்றுக்கு மரியாதை செலுத்தினார்.

பிறகு மைசூருவில் உள்ள கபினி அணைக்கு சென்று அங்கும் காவிரி ஆற்றுக்கு முதல்வர் எடியூரப்பா மரியாதை செலுத்தினார்.

பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தலைக்காவிரியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரியை தொடர்ந்து அதன் கிளை நதிகளான கபினி, ஹேமாவதி உள்ளிட்ட நதிகளும் நிரம்பியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோம்சேகர், மாண்டியா மக்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →