இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பதிவில் ராகுல் தெரிவித்திருப்பதாவது:
"ஜிடிபி 24 சதவகிதிம் சரிந்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இது மிகவும் மோசமானது. துரதிருஷ்டவசமாக எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியது."
முன்னதாக மத்தியப் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையாக போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்திருப்பது தெரியவந்தது.