முகப்பு
இந்தியா

மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 20 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 20 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
பகிர்:


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள லால்பாக் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு டேங்கர் லாரிகளுடன் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →