வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு அல்லது பதவி விலகு: மம்தா
மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்
மிட்னாப்பூர்: மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு மிட்னாபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, பாஜக அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மௌனமாக இருப்பதை விட, கைது செய்யப்பட்டு சிறை செல்வதே மேல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, உடனடியாக புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பாஜக பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவைக்கு ஏப்ரல் - மேவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.